என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மாட்டு வண்டியில் மண் கடத்தியவர் கைது

    மாட்டு வண்டியில் மண் கடத்தி வந்த வாலிபரை கைது செய்த போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
    கம்மாபுரம்:

    ஊமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னாலகரம் டோல்கேட் அருகே உள்ள ஓடையில் இருந்து அரசகுழி தெற்கு தெருவைச் சேர்ந்த வின்சென்ட் பவுல் (வயது 39) என்பவர் மாட்டு வண்டியில் மண் கடத்தி வந்ததாக தெரிகிறது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×