என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் சன்னதியில் வழிபாடு
    X
    அம்மன் சன்னதியில் வழிபாடு

    ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழா

    நாகை வெளிப்பாளையம் ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    ராகவேந்திரர் அவதரித்த தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நாகை வெளிப்பாளையம் ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். 

    இதன்படி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ராகவேந்திர அஷ்டாஷர ஹோமம், மகா அபிஷேகமும் நடந்தது.

    தொடர்ந்து ராகவேந்திரர் அலங்கரிக்கப்பட்டும், மாஞ்சாலி அம்மனுக்கு 50, 100,200,500 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டும், மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×