என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆங்கில வைத்தியம் பார்த்த சித்த மருத்துவர் கைது

    பெண்ணாடம் அருகே ஆங்கில வைத்தியம் பார்த்த சித்த மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி பகுதியில் சித்த மருத்துவம் படித்து விட்டு ஒரு வாலிபர் நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி ஆங்கில வைத்தியம் பார்ப்பதாக திட்டக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் செல்வேந்திரனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் அதிகாரிகள் குழுவினர் முருகன்குடிக்கு சென்றனர். அங்கு மொத்த மருந்து விற்பனை கடை ஒன்றில் கார்த்திகேயன் என்ற வாலிபர் நோயாளிகளுக்கு ஊசி, மருந்து செலுத்தி சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது.

    அவரிடம் விசாரித்தபோது, சித்த மருத்துவம், அக்குபஞ்சர் மருத்துவமும் மட்டுமே படித்த அவர் தனது மனைவியின் பெயரில் நடத்தும் மருந்து கடையில் விதிகளுக்கு புறம்பாக ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அதிகாரிகள் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


    Next Story
    ×