என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மோட்டார்சைக்கிள் திருட்டு

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓசூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் விண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது21). ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் ஓசூரில் மூக்கண்டப்பள்ளியில் என்.டி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தார். 

    சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளை அந்த விடுதியில் நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து தினேஷ்குமார் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×