என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 190-வது அவதார தினவிழா
Byமாலை மலர்4 March 2022 11:03 AM GMT (Updated: 4 March 2022 11:03 AM GMT)
அய்யா வைகுண்டர் 190-வது அவதார தின விழா திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் இன்று நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் 190-வது அவதார தின விழா இன்று நடைபெற்றது.
சட்ட ஆலோசகர் சந்திரசேகரன், திருச்செந்தூர் கோவில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், ராஜமோகன், ராஜ முருகன், எஸ்.அன்பழகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சங்கரன், குமாரசாமி நாடார், ராஜமணி நாடார், கணேசன், பாலகிருஷ்ணன் சுதேசன் காசிலிங்கம், ஆதி நாராயணன், பால கிருஷ்ணன், சொர்ண லிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையாநாடார், துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன் இணை தலைவர்கள், விஜய குமார்,பால்சாமி, ராஜதுரை, கோபால் நாடார், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், வரதராஜ பெருமாள், செல்வின் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் 190-வது அவதார தின விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு அன்னதர்மமும், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையும் நடைபெற்றது.
தொடர்ந்து ஒரு மணிக்கு அன்னதர்மம், மாலை 7 மணிக்கு பணிவிடை, அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி, தொடர்ந்து அன்னதர்மம் நடைபெற்றது.
190-வது அவதார தினமான இன்று அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல், காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, அவதார தின விழா பணிவிடையும் அன்ன தர்மம், இனிமம் வழங்குதல் நடைபெற்றது.
சட்ட ஆலோசகர் சந்திரசேகரன், திருச்செந்தூர் கோவில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், ராஜமோகன், ராஜ முருகன், எஸ்.அன்பழகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சங்கரன், குமாரசாமி நாடார், ராஜமணி நாடார், கணேசன், பாலகிருஷ்ணன் சுதேசன் காசிலிங்கம், ஆதி நாராயணன், பால கிருஷ்ணன், சொர்ண லிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையாநாடார், துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன் இணை தலைவர்கள், விஜய குமார்,பால்சாமி, ராஜதுரை, கோபால் நாடார், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், வரதராஜ பெருமாள், செல்வின் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X