என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேளாண் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பயிற்சி
Byமாலை மலர்2 March 2022 9:25 AM GMT (Updated: 2 March 2022 9:25 AM GMT)
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 10 பேர் ‘கிராம தங்கல்’ திட்டத்தின் கீழ் உடுமலை வட்டாரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை:
உடுமலை ஆண்டியக்கவுண்டனூர் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவிகள் ‘கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு’ நடத்தினர். கிராமங்களில் விவசாயிகள் மேற்கொள்ளும் பணிகளை அறிந்து கொள்ளும் வகையில் வேளாண் மாணவிகள் நேரடியாக சென்று பயிற்சி பெறுகின்றனர். இதற்காக அவர்கள் கிராமங்களை தேர்வு செய்து அங்கு சென்று இவற்றை அறிந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 10 பேர் ‘கிராம தங்கல்’ திட்டத்தின் கீழ் உடுமலை வட்டாரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் ஆண்டியக்கவுண்டனூரில் ஊர்மக்கள் மற்றும் விவசாயிகள் உதவியோடு, ‘கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு’ நடத்தினர்.
அதன்கீழ் அக்கிராமத்தின் சமூக வரைபடம், கிராம வள வரைபடம், பருவங்களும், பயிர்களையும் விளக்கும் வரைபடம் ஆகியவற்றை வரைந்தனர். கிராம மக்களுக்கு அதை விளக்கிக்கூறினர். அங்குள்ள பொன்மயில் நாற்றுப்பண்ணைக்கு சென்று, அதன் செயல்பாடுகளை, அறிந்து கொண்டதோடு விதை விதைப்பில் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X