search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவணங்களின்றி இயக்கப்பட்ட பள்ளி வாகனம்
    X
    ஆவணங்களின்றி இயக்கப்பட்ட பள்ளி வாகனம்

    உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய பள்ளி வாகனங்களுக்கு அபராதம்

    நாகையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 4 பள்ளி வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    சென்னை போக்குவரத்து ஆணையர் ஆணைப்படியும் மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படியும் தஞ்சை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி அனுமதி சீட்டு தகுதிச் சான்று இன்றி இயக்கப்படும் பள்ளி வாகனங்களையும், அனுமதிக்கு புறம்பாக புதிய நபர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களில் சோதனை நாகை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு 2 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சோதனையில் ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 4 பள்ளி வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.1 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×