என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே வாகன சோதனையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துவருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் கடலூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் சிதம்பரம், கிள்ளை மற்றும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் டெல்டா பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த நபர்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
அப்போது 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் கஞ்சா இருந்தன. கிள்ளை சேர்ந்த கிருபாநிதி (வயது 24), சிதம்பரம் சேர்ந்த மாணிக்கவேல் (வயது 28), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சேர்ந்தவர் முனுசாமி வயது 26 ஆகியோர் தெரிய வந்தது.
மேலும் இவர்களிடமிருந்து 3.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மதிப்பு சுமார் 4 லட்சம் ஆகும்.மேலும் அந்தந்த போலீஸ் நிலையத்தில் பிடித்த நபர்கள் மற்றும் கஞ்சாவை, டெல்டா பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






