என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை நிறுத்தம்
Byமாலை மலர்26 Feb 2022 7:52 AM GMT (Updated: 26 Feb 2022 7:52 AM GMT)
மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட வந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
வட மாநிலங்களில் இருந்து பின்னலாடை சார்ந்த வேலைவாய்ப்பு தேடி தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் ரெயில் மூலம் திருப்பூர் வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து உயிரிழப்பு அதிகரித்ததால் இங்குள்ளவர்களை பாதுகாக்கும் நோக்கில் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது.
மாநகராட்சி சுகாதாரப்பிரிவு, சுகாதாரத்துறை மூலம் டாக்டர், செவிலியர், உதவியாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, வடமாநில ரெயிலில் வந்திறங்குவோர் கண்காணிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட வந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
பணியில் இருந்து மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் மாற்று பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாத 18 வயதை கடந்தவருக்கு பிளாட்பார்மில் முகாம் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தொற்று பரிசோதனை நிறுத்தப்பட்டதால் தடுப்பூசி செலுத்தும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X