என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்25 Feb 2022 6:16 AM GMT (Updated: 25 Feb 2022 6:16 AM GMT)
பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், அரிசியை நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:
பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசார் பள்ளிப்பட்டு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் கண்காணித்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் ரேசன் அரிசி கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து பள்ளிப்பட்டு பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த மோகன், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எஸ்.ஆர்.புரம் பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்த கணேசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 350 கிலோ ரேஷன் அரிசி மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூரில் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.
பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசார் பள்ளிப்பட்டு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் கண்காணித்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் ரேசன் அரிசி கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து பள்ளிப்பட்டு பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த மோகன், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எஸ்.ஆர்.புரம் பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்த கணேசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 350 கிலோ ரேஷன் அரிசி மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூரில் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X