என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரம்
    X
    வாக்குப்பதிவு எந்திரம்

    கணவர் இறந்த துக்கத்திலும் வாக்களிக்க வந்த பெண்

    கணவர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குச்சாவடிக்கு வந்த பெண் வரிசையில் நின்று வாக்களித்த சம்பவம் வாக்காளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் இன்று மறுவாக்குப்பதிவு நடந்தது. இந்த வார்டை சேர்ந்த வனிதா என்பவரது கணவர் சங்கர் நேற்று இறந்து விட்டார். ஆனாலும் துக்கத்தை மறைத்துக்கொண்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற இன்று காலை வாக்குச்சாவடிக்கு வந்த வனிதா வரிசையில் நின்று வாக்களித்தார்.

    இந்த சம்பவம் வாக்காளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×