search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 504 பேர் பாதிப்பு

    சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை 504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 495க்கும் மேற்பட்டவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது 5பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மற்றவர்களுக்கு தனியார் மருத்துவவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 504 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 17-ந் தேதி கருப்பு பூஞ்சைக்கு 2 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
    Next Story
    ×