search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.
    X
    தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டி வழிகாட்டுதல் கூட்டம்

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டி வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.
    தூத்துக்குடி:

    இந்திய தேர்தல் ஆணையத்தால் 25.01.2022 முதல் 15.03.2022 வரை நடத்தப் பட்டு வரும் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் கூட்டம் மற்றும் கல் லூரி முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம்  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

     கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் சத்யபிரதா சாகு தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் விழிப் புணர்வு தொடர்பான போட்டிகள் குறித்தும், அதில் பங்கேற்கும் வழிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்தியபிரதாசாகு விளக்கி கூறினார்.  

    தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரிகளில் பயின்றுவரும் அனைத்து மாணவர்களையும் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் முழுஅளவில் பங்கேற்க செய்து அதிக அளவிலான பங்கேற்பை உறுதி செய்திட அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தினார்.  

    மேலும் போட்டிகளில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்க செய்வது தொடர்பாக அனைத்து கல்லூரி நிர்வாகத்திற்கு அனைத்து துறை வாயிலாகவும், மாவட்ட நிர்வாகம் மூலமும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார். 

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் கண்ணபிரான், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி கலெக்டர்கள், அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×