search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முத்தையாபுரம் அருகே உப்பள தொழிலாளி தற்கொலை

    முத்தையாபுரம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் உப்பள தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே உள்ள முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). உப்பளத் தொழிலாளி. இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். 

    நேற்று இரவு கணவன் -மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் தூங்க சென்றனர்.  இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் முன்புள்ள மரத்தில் நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

     தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×