என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாளை முதல் 3 நாட்கள் மூடப்படுவதால் டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்
Byமாலை மலர்16 Feb 2022 7:44 AM GMT (Updated: 16 Feb 2022 7:44 AM GMT)
டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படுவதால் இன்று ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை (17-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் தேர்தல் நடைபெறும் நகர்ப்புற பகுதிகளில் மட்டும் மூடப்படுகிறது.
தேர்தல் நடைபெறாத பிற பகுதிகளில் மதுக்கடைகள் செயல்படுகின்றன. அவற்றையும் மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால் மதுபிரியர்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகக் கூடும்.
தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் மது விற்பனை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கடைகள் மூடப்படுவதால் சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
ஓட்டுப்பதிவு சனிக்கிழமை நடைபெறுகின்ற சூழ்நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாகவே மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. இதனால் மதுபானங்களை அதிகளவு வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
கடைகள் மூடப்படுவதை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் போதுமான அளவு சரக்குகளை அனைத்து கடைகளிலும் இருப்பு வைக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இருப்பு வைத்தனர்.
இன்று மதியம் 12 மணிக்கு கடைகள் திறப்பதற்கு முன்னதாகவே மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். இரு சக்கர வாகனங்களிலும், கார்களில் சென்று மொத்தமாக மதுபானங்களை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர்.
சென்னையில் உள்ள எல்லா கடைகளிலும் கூட்டம் இன்று அலைமோதியது. மாலையில் இருந்து கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு சில கடைகளில் போலீசாரும் குவிக்கப்படுகிறார்கள். இரவு 10 மணிக்கு கடைகள் மூடப்படுவதால் அதற்கு முன்னதாக மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர்.
இதனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. கடை ஊழியர்களால் மதுபானங்களை சப்ளை செய்ய முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. தினமும் சராசரியாக ரூ.80 கோடிக்கு மது விற்பனையாவது வழக்கம்.
3 நாட்கள் கடைகள் மூடப்படுவதால் இன்று ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை (17-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் தேர்தல் நடைபெறும் நகர்ப்புற பகுதிகளில் மட்டும் மூடப்படுகிறது.
தேர்தல் நடைபெறாத பிற பகுதிகளில் மதுக்கடைகள் செயல்படுகின்றன. அவற்றையும் மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால் மதுபிரியர்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகக் கூடும்.
தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் மது விற்பனை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கடைகள் மூடப்படுவதால் சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
ஓட்டுப்பதிவு சனிக்கிழமை நடைபெறுகின்ற சூழ்நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாகவே மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. இதனால் மதுபானங்களை அதிகளவு வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
கடைகள் மூடப்படுவதை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் போதுமான அளவு சரக்குகளை அனைத்து கடைகளிலும் இருப்பு வைக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இருப்பு வைத்தனர்.
இன்று மதியம் 12 மணிக்கு கடைகள் திறப்பதற்கு முன்னதாகவே மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். இரு சக்கர வாகனங்களிலும், கார்களில் சென்று மொத்தமாக மதுபானங்களை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர்.
பிராந்தி, விஸ்கி, ரம், பீர் போன்ற அனைத்து வகையான மதுபானங்களையும் வாங்கி குவித்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள எல்லா கடைகளிலும் கூட்டம் இன்று அலைமோதியது. மாலையில் இருந்து கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு சில கடைகளில் போலீசாரும் குவிக்கப்படுகிறார்கள். இரவு 10 மணிக்கு கடைகள் மூடப்படுவதால் அதற்கு முன்னதாக மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர்.
இதனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. கடை ஊழியர்களால் மதுபானங்களை சப்ளை செய்ய முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. தினமும் சராசரியாக ரூ.80 கோடிக்கு மது விற்பனையாவது வழக்கம்.
3 நாட்கள் கடைகள் மூடப்படுவதால் இன்று ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...தி.மு.க.வில் மேலும் 18 போட்டி வேட்பாளர்கள் நீக்கம்- கட்சித் தலைமை நடவடிக்கை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X