என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலி
பரங்கிப்பேட்டை அருகே வீட்டு சுவர் இடிந்து விவசாயி பலி
பரங்கிப்பேட்டை அருகே வீட்டு சுவர் இடிந்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். (வயது 75). விவசாயி. இவர் கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சிலநாட்களாக பரங்கிப்பேட்டை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஆறுமுகத்தின் வீடு நனைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.
நேற்று இரவு வழக்கம் போல் ஆறுமுகம் தனது வீட்டில் தூங்கினார். நள்ளிரவு சமயம் திடீர் என வீட்டுசுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் ஆறுமுகம் சிக்கினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் இறந்தார்.
தகவல்அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். (வயது 75). விவசாயி. இவர் கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சிலநாட்களாக பரங்கிப்பேட்டை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஆறுமுகத்தின் வீடு நனைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.
நேற்று இரவு வழக்கம் போல் ஆறுமுகம் தனது வீட்டில் தூங்கினார். நள்ளிரவு சமயம் திடீர் என வீட்டுசுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் ஆறுமுகம் சிக்கினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் இறந்தார்.
தகவல்அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






