என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர் சேர்க்கை
    X
    மாணவர் சேர்க்கை

    எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை விரைவில் தொடக்கம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மருத்துவக்கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியை கடந்த ஜனவரி மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.  இதையடுத்து நடப்பு ஆண்டுக்கான (2022) மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. 

    Ôநீட் தேர்வில் வென்றவர்கள் மூலம் தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 6பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தனர். அகில இந்திய ஒதுக்கீட்டு இடமான 15 பேரில் 4 பேர் கல்லூரிக்கு நேரடியாக வந்து சேர்ந்தனர். மாநில அளவிலான இட ஒதுக்கீட்டின்படி 27பேர் வரை சேர்ந்துள்ளனர். 

    ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் மொத்தம் 71 பேர்  வரை சேர கலந்தாய்வில் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களில் 37பேர் நேரடியாக நேற்று தொடங்கிய வகுப்புகளுக்கு வந்தனர். அவர்களை டீன் அல்லி, துணை டீன் அன்பரசி,  கண்காணிப்பாளர் மலர் வண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.  

    உயிரி வேதியியல், மயக்கவியல் துறை பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள் பாடங்களை நடத்தினர். தற்போது மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விடுதிகளிலும் இடம் கிடைத்துள்ளன. விடுதி காப்பாளராக மருத்துவர் முகைதீன் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். 

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் ஓரிரு வாரத்தில் 100 மாணவர்கள் சேர்க்கை முழுமையாக முடிந்து வகுப்புகள் நடைபெறும் என்றும், ஓரிரு நாட்களில் எய்ம்ஸ் மாணவர்கள் 50 பேர் சேர்க்கைக்கான நடவடிக்கை தொடங்கப்பட உள்ளதாக மருத்துவக்கல்லூரி தரப்பில் தெரிவித்தனர்.
    Next Story
    ×