search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

    ஒரத்தநாடு அருகே 11&ம் வகுப்பு மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆசிரியர் கைது
    ஒரத்தநாடு:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன். இவர் இறந்துவிட்டார் இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகள் கீர்த்தனா. இவர் தனது தாயாருடன் வசித்து வந்தார். கீர்த்தனா வடசேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

    வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார் பள்ளியில் அனைத்து மாணவர்களுடன் ஸ்டெடி கிளாஸில் பேசிக்கொண்டிருந்தாராம். இதைப்பார்த்த ஆசிரியர் நாமக்கலை சேர்ந்த கணேஷ் என்பவர் கீர்த்தனாவை கண்டித்துள்ளார்.
     
    பின்னர் கீர்த்தனா மதியம் வீட்டிற்கு சாப்பிட சென்றவர் நீண்ட நேரமாகியும் பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து ஆசிரியர் கணேஷ், உடற்கல்வி ஆசிரியரை அழைத்துக்கொண்டு அந்த மாணவியின் வீட்டிற்கு முகவரி கேட்டு சென்றுள்ளார். ஆனால் வீடு தெரியாமல் இருவரும் பள்ளிக்கு திரும்பி வந்து விட்டனர்.

    இந்நிலையில் மாணவியின் தாய் ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்தபோது மகள் கீர்த்தனா தூக்குமாட்டி தற்கொலை செய்தது கண்டு கதறி துடித்துள்ளார். இறந்த தகவல் ஊர் முழுவதும் பரவியது.
     
    ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரை சரமாரி தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த பாப்பநாடு போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி ஓரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
     
    பாதிக்கப்பட்ட ஆசிரியரை மீட்டு பாப்பாநாடு போலீசார் விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×