என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
மாணவிக்கு கட்டாய திருமணம்: தாய்-ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது
போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவியின் தாய் அவரை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வராஜ்(26) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கும், செல்வராஜூக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து செல்வராஜ் மாணவியை அழைத்து கொண்டு சென்னைக்கு சென்றார். சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ், மாணவியுடன் ஊட்டிக்கு வந்து தங்கியுள்ளார்.
இதற்கிடையே மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக நீலகிரி மாவட்ட சைல்டுலைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதுகுறித்து அந்த அமைப்பினர் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த செல்வராஜ் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து தனித்தனியாக விசாரித்தனர்.
விசாரணையில் மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவியின் தாய் அவரை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வராஜ்(26) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கும், செல்வராஜூக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து செல்வராஜ் மாணவியை அழைத்து கொண்டு சென்னைக்கு சென்றார். சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ், மாணவியுடன் ஊட்டிக்கு வந்து தங்கியுள்ளார்.
இதற்கிடையே மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக நீலகிரி மாவட்ட சைல்டுலைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதுகுறித்து அந்த அமைப்பினர் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த செல்வராஜ் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து தனித்தனியாக விசாரித்தனர்.
விசாரணையில் மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாணவியின் தாய் மற்றும் அவரை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story






