என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிசி பறிமுதல்
    X
    அரிசி பறிமுதல்

    வீட்டில் பதுக்கிய 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    விருத்தாசலம் அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு விருத்தாச்சலம் கார்மாங்குடி பகுதிகளில் ரேசன் அரிசி பதுக்கி வைத்ததாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று திடீரென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் மூட்டைகள் அடுக்கி வைத்ததை இருந்ததை பார்த்தனர். அதனை திறந்து பார்த்தபோது ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த நபரை பிடித்து வந்து விசாரணை நடத்தியபோது, விருத்தாசலம் தாலுகா கார்மாங்குடியை சேர்ந்தவர் திருஞானம் (வயது 58) என்றும் மேலும் 21 மூட்டையில் 1 டன் ரேசன் அரிசி இருந்ததும் தெரியவந்தது. மேலும் பதிக்க வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி கோழி மற்றும் மாடுகளுக்கு தீவனமாக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் திருஞானத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×