search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானையால் சேதமான கரும்பு தோட்டம்-.
    X
    யானையால் சேதமான கரும்பு தோட்டம்-.

    கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்

    தாளவாடி அருகே திகனாரை கிராமத்தில் தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் கரும்புகளை சேதப்படுத்தியது.
    தாளவாடி:

    தாளவாடி அருகே திகனாரை கிராமத்தில் தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் கரும்புகளை சேதப்படுத்தியது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்  ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட  தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை  சேர்ந்தவர் குமார்  (34). இவருக்கு அந்த பகுதியில்  3 ஏக்கர் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில்   அவர் கரும்பு சாகுபடி செய் துள்ளார்.

    வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள்   இரவு இவரது  தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டு இருந்த   கரும்புகளை  தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது-.  

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குமார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் யானை களை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் யானைகள் அங்கேயே நின்று கொண்டு இருந்தது. 

    இதையடுத்து குமார் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த விவசாயிகள்  சத்தம் போட்டு பட்டாசுகள் வெடித்தும் யானைகளை துரத்தினர்.

    ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் கரும்பு தோட்டத்தை சேத படுத்தி கொண்டே இருந் தது.  சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றது. 

    இதில் 1 ஏக்கர் பரப் பளவில் பரிடப்பட்ட கரும்பு கள்  சேதமடைந்தது.  சேத மடைந்த கரும்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வனப்பகுதியை சுற்றிம் அகழி அமைக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    Next Story
    ×