என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
பயிறு, உளுந்து பாதிப்புக்கு பயிர் காப்பீடு செய்ய 15-ந்தேதி கடைசி நாள்
நாகை மாவட்டத்தில் பயிறு, உளுந்து பாதிப்புக்கு பயிர் காப்பீடு செய்ய 15-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்பு ராஜ் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாகை மாவட்டத்தில் பயிறு, உளுந்து கனமழையால் பாதிக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் வருகிற 15-ந்தேதி
பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்.
கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் வாங்கிக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பொது நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளில்
15-ந்தேதி வரை பாரத பிரதமர் காப்பீடுத்திட்டம் செய்ய கடைசி நாள்.
எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு
தெரிவித்துள்ளார்.
Next Story






