search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலி
    X
    பலி

    சிறுவர்களை காப்பாற்ற சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு

    மாடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை காப்பாற்ற சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
    மதுரை

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த வி.நாங்கூரைச்சேர்ந்த ராஜா மகன் வசந்தகுமார் (வயது21). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவர் நேற்று மதுரை அனுப்பானடி தாய் நகர், கிருஷ்ணன் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மொட்டைமாடியில் விளையாடிக்கொண்டு இருந்தார். 

    அப்போது அனுப்பானடி தாய் நகர் பாண்டி மகன் சுரேஷ்குமார்(16), பகலவன் நகர் மூர்த்தி மகன் சிவகுமார் (18) ஆகியோரை மின்சாரம் தாக்கியது. அவர்களைக் காப்பாற்றுவதற்காக வசந்தகுமார் சென்றார். அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உறவினர்கள் 3 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.  

    வழியிலேயே வசந்தகுமார் பரிதாபமாக இறந்தார். சுரேஷ்குமார், சிவக்குமார் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×