search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    டிக்-டாக் பெண் கடத்தல்?

    மதுரையில் பிரபல டிக்-டாக் பெண் திடீரென மாயாமானார். அவர் கடத்தப்படடாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    மதுரை

    மதுரை எல்லீஸ்நகர் போடி லைன் பகுதியை சேர்ந்தவர் கலைவாணி(வயது 25). இவருக்கு கணவர் சுந்தரபாண்டி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். வாடிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுந்தரபாண்டி வேலை பார்த்து வருகிறார்.

    கலைவாணி சமூக வலைத்தளத்தில் (டிக்&-டாக்) பிரபலமாக உள்ளார். அவர் எந்த நேரமும் செல்போனை பயன்படுத்தி வந்தார். இதனால் எரிச்சல் அடைந்த கணவர் ‘செல்போனை அடிக்கடி பயன்படுத்தாதே’ என்று சத்தம் போட்டார். இதனால் கலைவாணிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. 

    சம்பவத்தன்று மதியம் கலைவாணி 2 பிள்ளை களையும் உறவினர் வீட்டில் ஒப்படைத்து விட்டு, “நான் சென்னையில் உள்ள பெற்றோரை பார்க்க செல்கிறேன்” என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்று விட்டார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.  வேலை முடிந்து வந்த சுந்தரபாண்டி, மனைவியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உறவினர்களிடம் விசாரித்தார். அப்போதுதான் மனைவி மாயமான விஷயம் தெரியவந்தது.

    இதையடுத்து அவர் சென்னையில் வசிக்கும் மாமியார் வீட்டுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது கலைவாணி சென் னைக்கும் செல்லவில்லை என்பது தெரிய வந்தது. 
    அதிர்ச்சி அடைந்த சுந்தரபாண்டி இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து மாயமான டிக்-டாக் கலை வாணியை தேடி வருகிறார்.

    மேலும் அவர் கடத்தப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×