என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்து தீக்குளித்த பெண் சாவு

    கணவர் இறந்த சோகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்து தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராணி (வயது 38). இவரது கணவர் ஜெயகணேஷ். 

    இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்தார். இதனால் கணவரின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத செல்வராணிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் தனியாக இருந்த செல்வராணி விரக்தியில் கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்து தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தினர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது சகோதரி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    கணவரின் இறப்பை தாங்கிக்கொள்ளாத மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×