என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நகராட்சி ஊழியர் தற்கொலை

    சாத்தூர் அருகே நகராட்சி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    விருதுநகர்

    சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் கவிராஜ்(வயது 39). இவர் திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் (தற்போது சிவகாசி மாநகராட்சி)பில் கலெக்டராக பணியாற்றி வந்தார். கவிராஜ் அடிக்கடி மதுகுடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. 

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக கவிராஜ் பணிக்கு செல்லவில்லை. இதுகுறித்து மனைவி மாரியம்மாள் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த கவிராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி ரிசர்வ் லைன் காலனியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி விஜயா(57). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து மயங்கினார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    Next Story
    ×