search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று மளமளவென சரிந்து வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 5,104 ஆக பதிவாகி இருந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 4,519 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1,15,898 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    கொரோனா தொற்று பாதிப்புக்கு 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,809 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 20,237 பேர் குணமடைந்தனர். சென்னையில் ஒருநாள் பாதிப்பு 792 ஆக குறைந்துள்ளது.

    Next Story
    ×