என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    தி.மு.க. பிரமுகர் சுயேட்சையாக போட்டியிடுவதால் உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர்

    20 மற்றும் 24-வது வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 20-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளராக நகரத்தலைவர் பாஸ்கரின் மனைவி தேவகி பாஸ்கர் போட்டியிடுகிறார்.

    சென்னை:

    செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    20 மற்றும் 24-வது வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 20-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளராக நகரத்தலைவர் பாஸ்கரின் மனைவி தேவகி பாஸ்கர் போட்டியிடுகிறார்.

    ஏற்கனவே இந்த வார்டில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் யுவனேசன் தனது மனைவி மாலதிக்கு சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தார். ஆனால் அந்த வார்டு காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இத னால் யுவனேசனின் மனைவி மாலதி இந்த வார்டில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    எனவே தனது வெற்றி பாதிக்கப்படுமோ என்று கருதிய காங்கிரஸ் வேட்பாளர் தேவகி பாஸ்கர் தி.மு.க., காங்கிரஸ் கட்சி ஒப்புதலை பெற்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதுபற்றி தேவகி பாஸ்கர் கூறுகையில், “காங்கிரஸ் சார்பில் 20-வது வார்டில் நான் போட்டியிடுகிறேன். அந்த வார்டில் தி.மு.க.வை சேர்ந்த யுவனேசனின் மனைவி சுயேட்சையாக போட்டியிடுகிறார். மனுவை வாபஸ் பெறும்படி தி.மு.க.வினர் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அவர் ஏற்கவில்லை.

    எனவே கை சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு இருக்காது என்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன்” என்றார்.

    Next Story
    ×