என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீட்பு
விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் காணாமல் போன சிறுமியை உடனே மீட்ட போலீசார்
விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் காணாமல் போன 4 வயது சிறுமியை உடனே மீட்ட போலீசார் அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.
கடலூர்:
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
கோவிலின் மேற்குரத வீதியில் பாதுகாப்பு பணியில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் ஈடுபட்டது. அப்போது போது சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி அழுது கொண்டிருப்பதை போலீசார் கண்டனர்.
உடனே போலீசார் அந்த குழந்தையின் அருகில் சென்று விசாரணை மேற்கொண்டதில் குழந்தையின் பெயர் மகாலட்சுமி, தந்தை பெயர் சுதன், தாய் பெயர் கவுரி கள்ளக்குறிச்சி என கூறியது.
அதன்பேரில் உடனடியாக காவல்துறை பாதுகாப்புபணி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. போலீசாரின் அறிவிப்பை கேட்ட குழந்தை மகாலட்சுமியின் தாய் கவுரி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்டு உறுதி செய்துகொண்டு குழந்தை மகாலட்சுமியை அவரது தாய் கவுரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையை உடனடியாக மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார். மேலும் கும்பாபிஷேகத்திற்கு வரும் பெண் பக்தர்களின் ஆபரணங்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்கள் மூலம் ஊக்கு அணிவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
கோவிலின் மேற்குரத வீதியில் பாதுகாப்பு பணியில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் ஈடுபட்டது. அப்போது போது சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி அழுது கொண்டிருப்பதை போலீசார் கண்டனர்.
உடனே போலீசார் அந்த குழந்தையின் அருகில் சென்று விசாரணை மேற்கொண்டதில் குழந்தையின் பெயர் மகாலட்சுமி, தந்தை பெயர் சுதன், தாய் பெயர் கவுரி கள்ளக்குறிச்சி என கூறியது.
அதன்பேரில் உடனடியாக காவல்துறை பாதுகாப்புபணி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. போலீசாரின் அறிவிப்பை கேட்ட குழந்தை மகாலட்சுமியின் தாய் கவுரி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்டு உறுதி செய்துகொண்டு குழந்தை மகாலட்சுமியை அவரது தாய் கவுரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையை உடனடியாக மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார். மேலும் கும்பாபிஷேகத்திற்கு வரும் பெண் பக்தர்களின் ஆபரணங்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்கள் மூலம் ஊக்கு அணிவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
Next Story






