என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
பேரிகை அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை
பேரிகை அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு பீரேஸ்வரா நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 37). இவர் பேரிகை அருகே சொன்னேபுரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் குடும்பத்தில் பிரச்சினை இருந்தது. இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்று விட்டார். இந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்த முனிராஜ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






