என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100 நாள் பணியாளர்கள்.
    X
    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100 நாள் பணியாளர்கள்.

    100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

    வேதாரண்யம் அருகே 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம் பெத்துகுட்டி தெருவிலுள்ள தோப்பு புறம் போக்கு பகுதியில் பண்ணைக்குட்டை அமைக்க 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்ற சென்றனர்.

    அப்போது அங்கு உள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தோப்பு புறம்போக்கு இடத்தில் மீனவர்களுக்கு வீடு கட்டுவதற்காக இடம் கேட்டுள்ளோம் எனவே குளம் வெட்ட கூடாது என்று தடுத்துள்ளனர்.

    உடனடியாக 100 நாள் வேலை வாய்ப்பில் பணியாற்றிய 52 தொழிலாளர்களும் வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்வெட்டி கூடையுடன் வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து வேலை செய்ய அனுமதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த புஷ்பவனம் ஊராட்சி மன்ற தலைவர் நாடிமுத்து, துணைத் தலைவர் ராஜகோபாலன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமலிங்கம், பணி மேற்பார்வையாளர் வேல் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் நாளை இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வேலை வழங்கப்படும் என ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமலிங்கம் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
    Next Story
    ×