என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    சிதம்பரம் அருகே ஆற்றில் பிணமாக மிதந்த 4 வயது சிறுவன்- போலீசார் விசாரணை

    சிதம்பரம் அருகே 4 வயது சிறுவன் மர்மமான முறையில்‌ ஆற்றில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தியாகவல்லி பகுதி திருச்சோபுரம் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் அஸ்வந்த் (வயது 4). இவன் நேற்று அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானான்.

    நீண்ட நேரமாகியும் அஸ்வந்த் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அஸ்வந்த் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அஸ்வந்த்தின் அண்ணன் வெங்கடேசன் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுவன் அஸ் வந்தை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள உப்பனாற்றில் சிறுவனின் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கும் அஸ்வந்த்தின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அஸ்வந்த்தின் பெற்றோர் ஆற்றில் பிணமாக மிதப்பது அஸ்வந்த் என்பதை உறுதி செய்துவிட்டு தனது மகனின் உடலை கண்டு அலறி துடித்தனர்.

    மேலும் போலீசார் இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 4 வயது சிறுவன் மர்மமான முறையில்‌ ஆற்றில் இறந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×