என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
விருதுநகர் அருகே வாலிபர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூரை சேர்ந்தவர் மாரீஸ்வரன்(வயது 27). இவர் உடல் நலம் பாதித்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர் முதலிபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள தூத்திப்பாறையை சேர்ந்தவர் ஈஸ்வரி(25). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்த இவர் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை ஈஸ்வரி திருமணம் செய்துகொண்டார்.
முருகனுக்கு இது 3வது திருமணம் ஆகும். இந்தநிலையில் கணவன்&மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த ஈஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






