என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டதாரி பெண் மாயம்
பட்டதாரி பெண் உள்பட 3 பேர் மாயம்
ராஜபாளையம் மற்றும் விருதுநகரில் பட்டதாரி பெண் உள்பட 3 பேர் மாயமாகினர்.
விருதுநகர்
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் மாரீஸ்வரி(வயது 21). இவர் பி.ஏ. படித்து விட்டு வீட்டில் இருந்தார். வேலைக்கு செல்வதாக அவர் கூறியபோது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்வதாக கூறினர்.
இந்தநிலையில் மாரீஸ்வரி திடீரென மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றிய தகவல் கிடைக்காததால் விருதுநகர் கிழக்கு போலீசில் தாயார் வளர்மதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் பெரியார் தெருவை சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். தாத்தா வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் மங்காபுரத்தை சேர்ந்தவர் காளிராஜ்(27). இவரது மனைவி புவனாவுக்கு கடந்த 21ந் தேதி குழந்தை பிறந்தது. தாய் வீட்டில் இருந்த புவனாவுக்கும், காளிராஜூ-க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்தநிலையில் காளிராஜ் திடீரென மாயமாகி விட்டா£ர். இது தொடர்பாக அவரது தாயார் முத்தம்மாள் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






