என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருமருகலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் அருகில் டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருமருகல் ஒன்றிய பொறுப்பு செயலாளர் சந்திரசேகர், பொறுப்பு தலைவர் முத்துவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாய சங்க நாகை மாவட்ட செயலாளர் பாபுஜி கோரிக்கை விளக்கி பேசினார்.
இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ், திருமருகல் கிளை செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






