என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா மற்றும் இந்து முன்னணியினர்.
மதுரையில் மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது
By
மாலை மலர்31 Jan 2022 11:35 AM GMT (Updated: 31 Jan 2022 11:35 AM GMT)

மதுரையில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் கிறிஸ்தவ ஏ.ஜி. சபை இயங்கி வருகிறது. நேற்று பிரவீன்ராஜ்குமார் உள்பட பலர் இந்த ஆலயத்தில் வழிபாடு நடத்தி கொண்டிருந்தனர்.
அங்கு வந்த சிலர் சேர்களை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து பிரவீன் ராஜ்குமார் தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, பா.ஜனதாவை சேர்ந்த ராஜகண்ணன், பாலசுப்பிரமணியன், சுபாநாகலூ, ஆதிசேஷன், இந்து முன்னணி அரசு பாண்டி மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பா.ஜனதா நிர்வாகிகளில் சிலர் இன்று அதிகாலை திடீரென்று கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் வில்லாபுரம் ஆர்ச் அருகே இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
