என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூரில் தேர்தல் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
தேர்தல் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம்
திருப்பத்தூரில் தேர்தல் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சிவகங்கை காவல் துறை சார்பில் தேர்தல் பணி பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் ஏனைய வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகள் காவலர்களுக்கு வழங்கப்பட்டன.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அன்பு, ராமசாமி, வெற்றிச்செல்வன் மற்றும் திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், திருப்பத்தூர் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.
Next Story






