search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
    X
    பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.

    கோபிசெட்டிபாளையம் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து

    கோபிசெட்டிபாளையம் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள், பஞ்சு பேல்கள் எரிந்து சேதமானது.

    கோபிசெட்டிபாளையம:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சி.கே.எஸ். நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருக்கு அயலூர் என்ற பகுதியில் நூல் மில் உள்ளது. இந்த மில்லில் 3 ஷிப்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர்.

    வழக்கம்போல் நேற்று இரவும் ஊழியர்கள் பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது புளோ ரூம் என்ற பகுதியில் மின்கசிவு காரணமாக பஞ்ச பேல்களில் தீப்பொறி பட்டு தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த அறைக்கும் சென்றது.

    அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.

    தொடர்ந்து ஊழியர்கள் மில்லில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி தெரிய வந்ததும் கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் பஞ்சுக்குள் இருந்து புகை வந்து கொண்டே இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் பஞ்சு மீது தொடர்ந்து தண்ணீரை ஊற்றினர்.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள், பஞ்சு பேல்கள் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×