என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
ஜிப்மர் மருத்துவமனை
ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் தொடங்குகிறது
By
மாலை மலர்31 Jan 2022 2:56 AM GMT (Updated: 31 Jan 2022 2:56 AM GMT)

ஜிப்மரில் நாளை மறுநாள் முதல் 7-ந் தேதி வரை எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை ஜிப்மர் அகாடமி சென்டரில் உள்ள மினி ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.
புதுச்சேரி:
ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் ஜிப்மர் நிர்வாகம் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 7-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) காலை 9 மணி முதல் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை ஜிப்மர் அகாடமி சென்டரில் உள்ள மினி ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. இடங்கள் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழ் அவசியம். மாணவர் சேர்க்கைக்கு வருவோர் நீட் தேர்வு எழுதுவதற்கு கொடுத்திருந்த அடையாள அட்டை, நீட் தேர்வு ஹால் டிக்கெட், தேசிய தேர்வு முகமை அளித்த தரவரிசை கடிதம், ஆன்லைனில் பெறப்பட்ட இட ஒதுக்கீடு கடிதம், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், நடத்தை சான்றிதழ் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாணவர் சேர்க்கையில் ஏதாவது மாற்றம் உள்ளதா? என்பது குறித்து ஜிப்மர் மற்றும் மத்திய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி இணையதளங்களை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் ஜிப்மர் நிர்வாகம் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 7-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) காலை 9 மணி முதல் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை ஜிப்மர் அகாடமி சென்டரில் உள்ள மினி ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. இடங்கள் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழ் அவசியம். மாணவர் சேர்க்கைக்கு வருவோர் நீட் தேர்வு எழுதுவதற்கு கொடுத்திருந்த அடையாள அட்டை, நீட் தேர்வு ஹால் டிக்கெட், தேசிய தேர்வு முகமை அளித்த தரவரிசை கடிதம், ஆன்லைனில் பெறப்பட்ட இட ஒதுக்கீடு கடிதம், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், நடத்தை சான்றிதழ் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாணவர் சேர்க்கையில் ஏதாவது மாற்றம் உள்ளதா? என்பது குறித்து ஜிப்மர் மற்றும் மத்திய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி இணையதளங்களை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
