என் மலர்
உள்ளூர் செய்திகள்

அந்தியூர் புகழ்பெற்ற கால்நடை சந்தை வழக்கம் போல் நடைபெற்றது.
அந்தியூர் மாட்டுசந்தை இன்று தொடங்கியது
ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு ரத்து செய்யப்பட்டிருப்பதால் 3 வாரமாக ரத்து செய்யப்பட்ட அந்தியூர் மாட்டுசந்தை இன்று தொடங்கியது.
அந்தியூர்:
ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு ரத்து செய்யப்பட்டிருப்பதால் 3 வாரமாக ரத்து செய்யப்பட்ட அந்தியூர் மாட்டுசந்தை இன்று தொடங்கியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற வாரச்சந்தை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம்.ஞாயிற்றுக்கிழமைகளில் கால்நடை சந்தையும், திங்கட்கிழமை மளிகை காய்கறி சந்தையும் நடைபெறும்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விடுத்திருந்தது.
இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களில் வழிபட தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்ததை அடுத்து தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது. அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை தளர்வு செய்தது.
இதனை தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக அந்தியூர் மாட்டுச்சந்தை நடைபெறாமல் இருந்து வந்தது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று வழக்கம் போல் அந்தியூர் கால்நடை சந்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கியும், விற்பனை செய்தும் வருகின்றனர்.
பெருந்துறை வாரச்சந்தையானது வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் சந்தை யானது சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.
இந்தவாரம் முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சந்தை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.
Next Story






