என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காதலிக்க வற்புறுத்தியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி- போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
Byமாலை மலர்28 Jan 2022 5:16 AM GMT (Updated: 28 Jan 2022 5:16 AM GMT)
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே காதலிக்க வற்புறுத்தியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் ஓசூரில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி விடுமுறைக்காக புதுக்கோட்டை கிராமத்திற்கு வந்து செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஜீவானந்தம் (வயது21) என்பவர் மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். சிறுமியை பலமுறை காதல் செய்வதாக கூறி ஜீவானந்தம் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஜீவானந்தத்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாணவியின் தாய் பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவியை காதல் செய்வதாக கூறி தொந்தரவு செய்த டிரைவர் ஜீவானந்தத்தை போக்சோ தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் ஓசூரில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி விடுமுறைக்காக புதுக்கோட்டை கிராமத்திற்கு வந்து செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஜீவானந்தம் (வயது21) என்பவர் மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். சிறுமியை பலமுறை காதல் செய்வதாக கூறி ஜீவானந்தம் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஜீவானந்தத்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாணவியின் தாய் பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவியை காதல் செய்வதாக கூறி தொந்தரவு செய்த டிரைவர் ஜீவானந்தத்தை போக்சோ தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X