என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் செய்த பொதுமக்கள்.
பொதுமக்கள் சாலை மறியல்
நம்பியூர் அருகே இன்று காலைசாலை பணியின்போது பழுதான குடிநீர் குழாயை சீரமைத்துதர கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே இன்று காலைசாலை பணியின்போது பழுதான குடிநீர் குழாயை சீரமைத்துதர கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
நம்பியூர் அருகே உள்ளது கோசனம் பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்துக்குட்பட்ட கே.மேட்டுப்பாளையம் என்ற ஊரில் திட்டமலை-கே.மேட்டுப்பாளையம் வரை உள்ள தார்சாலை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியின்போது ஊருக்குள் செல்லும் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பழுதான குடிநீர் குழாயை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை குழாய் உடைப்பு சரிசெய்யப்பட வில்லை.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஏராள மான ஆண்கள், பெண்கள் இன்று காலை திரண்டு வந்து கோபிசெட்டிபாளையம்- நம்பியூர் ரோடு கே.மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த பஸ் மற்றும் வாகனங்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. இதுபற்றி தெரிய வந்ததும் நம்பியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story






