என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டா திருத்த முகாம்
கணினி பட்டா திருத்த முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா திருத்த முகாம் 28-ந் தேதி நடக்கிறது
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப் பிடங்களுக்கே கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக வருகிற 28ந்தேதி (வெள்ளிக்கிழமை) காரைக்குடி வட்டத்தில் வெற்றியூர் கிராமத்திலும், தேவகோட்டை வட்டத்தில் மாடக்கோட்டை கிராமத் திலும், திருப்பத்தூர் வட்டத்தில் மகிபாலன்பட்டி கிராமத்திலும், சிங்கம் புணரி வட்டத்தில் முறையூர் கிராமத்திலும், சிவகங்கை வட்டத்தில் நகரம்பட்டி கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் விளத்தூர் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் வு.நெல்முடிக்கரை கிராமத்திலும், இளையான்குடி வட்டத்தில் சூராணம் கிராமத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் முத்தூர் கிராமத்திலும் கணினி பட்டா திருத்த முகாம்கள் நடைபெற உள்ளன.
பொதுமக்கள் மேற்கண்ட கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






