என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே காரில் மது கடத்தியவர் கைது
Byமாலை மலர்25 Jan 2022 9:27 AM GMT (Updated: 25 Jan 2022 10:02 AM GMT)
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் போலீசார் வாகன சோதனை செய்தபோது காரில் 480 மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் காவல் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 10 பெட்டிகளில் 480 மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், கார் டிரைவரை பிடித்து விசாரித்தனர். அதில் சிவகிரி அருகே உள்ள செந்தட்டியாபுரம் புதூர் காலனி தெருவை சேர்ந்த முத்துக்குமார் (வயது 45) என்பதும், கரிவலம்வந்தநல்லூர் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கியதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X