என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் எலக்ட்ரீசியன் தற்கொலை
Byமாலை மலர்24 Jan 2022 9:45 AM GMT (Updated: 24 Jan 2022 9:45 AM GMT)
மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
விருதுநகர் முத்துராமலிங்கநகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40), எலக்ட்ரீசியன். இவரது மனைவி செல்வி.
பாலமுருகன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. குடி பழக்கத்துக்கும் அடிமையானதாக தெரிகிற-து. அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால் கணவன்&மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.
மது பழக்கத்தை கைவிடுமாறு மனைவி கூறியும் பாலமுருகன் கேட்கவில்லை. 2 நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் செல்வி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்ற தால் விரக்தி அடைந்த பாலமுருகன் வீட்டின் மாடி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் வீடு திரும்பிய செல்வி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்தார். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாடி அறையில் பாலமுருகன் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X