என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செங்கல்பட்டில் ஆம்புலன்ஸ் டிரைவர் கல்லால் தாக்கி கொலை
Byமாலை மலர்24 Jan 2022 9:15 AM GMT (Updated: 24 Jan 2022 9:15 AM GMT)
செங்கல்பட்டில் ஆம்புலன்ஸ் டிரைவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியை சேர்ந்தவர் விஜி என்ற விஜயகுமார் (வயது 35). இவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி எதிரே இயங்கி வரும் தனியார் ஆம்புலன்சில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அரசு ஆஸ்பத்திரி எதிரே பெரியார் நகர் பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான ஓய்வறையில் சக ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் மது குடித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் விஜயகுமாரை ராஜா, தர்மதுரை, அஜித் ஆகியோர் கல்லால் தாக்கி உள்ளனர். இதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து போன விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X