search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    சிதம்பரம் அருகே வீட்டை விட்டு சென்ற இளம்பெண் மாயம்

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டை விட்டு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள டி.எஸ்.பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 31). இவரது மனைவி சுசித்ரா (24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற சுசித்ரா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சி அடைந்த ராம்குமார் தனது மனைவியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் சுசித்ரா கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ராம்குமார் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன சுசித்ரா குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×