search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதல்- திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் பலி

    திருக்கோவிலூர் அருகே டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கொடுங்கால் கிராமத்தை சேர்ந்தவர் கார்மேல் மகள் வினிதா (வயது 24). இவருக்கும் உறவினரான அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஜேம்ஸ்பாண்டு (28) என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வினிதாவும், ஜேம்ஸ்பாண்டும் உளுந்தூர்பேட்டை அடுத்த சென்னாகுப்பத்தில் உள்ள தேவாலயத்துக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டனர். வினிதா ஸ்கூட்டரை ஓட்டினார். ஜேம்ஸ்பாண்டு பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். அரகண்டநல்லூர் அடுத்த தனியார் கலைக்கல்லூரி அருகே வந்தபோது, முன்னால் மின்கம்பங்களை ஏற்றிச்சென்ற டிராக்டரை, அதன் டிரைவர் திடீரென நிறுத்தினார். அப்போது வினிதா ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் டிராக்டர் மீதும், மின்கம்பங்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வினிதா, ஜேம்ஸ்பாண்டு ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வினிதா பரிதாபமாக உயிரிழந்தார். ஜேம்ஸ்பாண்டுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விபத்தை ஏற்படுத்தியதாக டிராக்டர் டிரைவர் மீது அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×