search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அஞ்சல் துறையில் டிரைவர் பணிக்கு ஆட்கள் தேர்வு

    டிரைவர் பணிகளுக்கு கோவையில் 11 பணியிடங்களும், ஈரோட்டில் 2 இடங்களும், நீலகிரி, திருப்பூரில் தலா 1 இடங்களும் உள்ளன. டிரைவர் பணிகளுக்கு கோவையில் 11 பணியிடங்களும், ஈரோட்டில் 2 இடங்களும், நீலகிரி, திருப்பூரில் தலா 1 இடங்களும் உள்ளன.
    திருப்பூர்:

    இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    டிரைவர் பணிகளுக்கு கோவையில் 11 பணியிடங்களும், ஈரோட்டில் 2 இடங்களும், நீலகிரி, திருப்பூரில் தலா 1 இடங்களும் உள்ளன. சேலத்தில் 2 இடங்கள் இருக்கின்றன. சம்பளம் ரூ.18,000 தொடங்கி ரூ. 62,000 வரை. வயது வரம்பு 56க்குள் இருக்க வேண்டும். 

    தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து சான்றிதழ்கள் சாரிபார்ப்பு மற்றும் அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

    விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager, Mail Motor Service, Goods Shed Road, Coimbatore – 641001. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.03.2022 ஆகும். 
    Next Story
    ×