என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஸ்ரீமுஷ்ணம் அருகே தொழிலாளி வீட்டில் தீ விபத்து
Byமாலை மலர்22 Jan 2022 9:21 AM GMT (Updated: 22 Jan 2022 9:21 AM GMT)
ஸ்ரீமுஷ்ணம் அருகே தொழிலாளி வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கள்ளிப்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் தொழிலாளி ரவிச்சந்திரன் மனைவி பார்வதி. சீமை ஓடு போட்ட வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டுக்குள் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீப் பற்றி எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ராஜ்குமார் தலைமையில் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பிரிட்ஜ், பீரோ மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்பட அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் சேதமதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கள்ளிப்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் தொழிலாளி ரவிச்சந்திரன் மனைவி பார்வதி. சீமை ஓடு போட்ட வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டுக்குள் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீப் பற்றி எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ராஜ்குமார் தலைமையில் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பிரிட்ஜ், பீரோ மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்பட அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் சேதமதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X