search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ விபத்து
    X
    தீ விபத்து

    ஸ்ரீமுஷ்ணம் அருகே தொழிலாளி வீட்டில் தீ விபத்து

    ஸ்ரீமுஷ்ணம் அருகே தொழிலாளி வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கள்ளிப்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் தொழிலாளி ரவிச்சந்திரன் மனைவி பார்வதி. சீமை ஓடு போட்ட வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டுக்குள் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீப் பற்றி எரிந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ராஜ்குமார் தலைமையில் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பிரிட்ஜ், பீரோ மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்பட அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் சேதமதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×